ஒன்றிய அரசின் அறிவிப்பு என்று வைரலாகும் சுற்றறிக்கை 
Tamil

Fact Check: நவீன திருட்டு தொடர்பாக ஒன்றிய அரசு சுற்றறிக்கை வெளியிட்டதா; உண்மை என்ன?

Ahamed Ali

“மத்திய அரசு சேவை கூட்டுறவு நிலம் மற்றும் குழு வீட்டுவசதி சங்கத்தின்” லெட்டர்பேடில் மார்ச் 26, 2024ஆம் ஆண்டு தேதியிடப்பட்ட எஸ்சி வோஹ்ரா என்பவர் கையெழுத்திட்ட சுற்றறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. அதில், "அனைத்து பிளாட்/ஹவுஸ் உரிமையாளர்களுக்கும் ஓர் எச்சரிக்கை" என்ற தலைப்பில், ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் உள்துறை அமைச்சக ஊழியர்களைப் போல திருடர்கள் வீடுகளுக்குள் நுழைய புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இது நவீன திருட்டு என்றும் அனைவரும் கவனமாக இருக்கும்படியும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வைரலாகும் மொழிபெயர்க்கப்பட்ட சுற்றறிக்கை

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் சுற்றறிக்கை போலி என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்றும் அவ்வாறாக ஒன்றிய அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் தெரிய வந்தது. மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அதிகாரப்பூர்வ தேதி அரசாங்கத்தால் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. இதன் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகள் துவங்கவில்லை என்பது தெரிகிறது.

தொடர்ந்து, இது குறித்து சமூக வலைதளங்களில் தேடுகையில் தமிழ்நாடு காவல்துறை வைரலாகும் அறிக்கையை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி பதிவிட்டு, “ஒன்றிய அரசு ‘நவீன திருட்டு தொடர்பாக’ எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் வைரலாகும் இந்த அறிக்கை போலியானது” என்றும் விளக்கம் அளித்துள்ளது.

Conclusion:

நம் தேடலில் முடிவாக நவீன திருட்டு நடைபெறுவதாகவும் அனைவரும் கவனமாக இருக்கும்படியும் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் சுற்றறிக்கை போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Video of Nashik cop prohibiting bhajans near mosques during Azaan shared as recent

Fact Check: ഫ്രാന്‍സില്‍ കൊച്ചുകു‍ഞ്ഞിനെ ആക്രമിച്ച് മുസ്ലിം കുടിയേറ്റക്കാരന്‍? വീഡിയോയുടെ വാസ്തവം

Fact Check: சென்னை சாலைகள் வெள்ளநீரில் மூழ்கியதா? உண்மை என்ன?

ఫ్యాక్ట్ చెక్: హైదరాబాద్‌లోని దుర్గా విగ్రహం ధ్వంసమైన ఘటనను మతపరమైన కోణంతో ప్రచారం చేస్తున్నారు

Fact Check: ಆಹಾರದಲ್ಲಿ ಮೂತ್ರ ಬೆರೆಸಿದ ಆರೋಪದ ಮೇಲೆ ಬಂಧನವಾಗಿರುವ ಮಹಿಳೆ ಮುಸ್ಲಿಂ ಅಲ್ಲ