நடிகர் பிரபாஸ் கேரள மாநிலத்திற்கு வழங்கிய ரூபாய் 32 கோடி நிதி உதவி 
Tamil

Fact Check: வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக நடிகர் பிரபாஸ் ரூ. 32 கோடி வழங்கினாரா?

வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக நடிகர் பிரபாஸ் ரூபாய் 32 கோடி வழங்கியதாக வைரலாகும் தகவல்

Ahamed Ali

“நடிகர் பிரபாஸ் வயநாட்டில் ஏற்பட்ட நிலசரிவு நிவாரணத்திற்கு 32 கோடி நிதி அளித்துள்ளார்” என்ற கேப்ஷனுடன் நடிகர் பிரபாஸ் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூபாய் 32 கோடி நிதி உதவி அளித்ததாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் அவர் ரூபாய் 2 கோடி மட்டுமே நிதி உதவி வழங்கினார் என்றும் தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, நேற்று (ஆக. 8)  இந்து தமிழ் இது தொடர்பாக செய்து ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், “கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த நிலச்சரிவில் மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு மீட்புப் பணி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், நடிகர் பிரபாஸ், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை News 18 Tamilnadu மற்றும் தினத்தந்தி உள்ளிட்ட ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

Conclusion:

நம் தேடலின் முடிவாக நடிகர் பிரபாஸ் வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக ரூபாய் 32 கோடி வழங்கியதாக வைரலாகும் தகவல் தவறானது. உண்மையில், அவர் ரூபாய் 2 கோடி வழங்கியதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Potholes on Kerala road caught on camera? No, viral image is old

Fact Check: ഇത് റഷ്യയിലുണ്ടായ സുനാമി ദൃശ്യങ്ങളോ? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: ஏவுகணை ஏவக்கூடிய ட்ரோன் தயாரித்துள்ள இந்தியா? வைரல் காணொலியின் உண்மை பின்னணி

Fact Check: ರಷ್ಯಾದಲ್ಲಿ ಸುನಾಮಿ ಅಬ್ಬರಕ್ಕೆ ದಡಕ್ಕೆ ಬಂದು ಬಿದ್ದ ಬಿಳಿ ಡಾಲ್ಫಿನ್? ಇಲ್ಲ, ವಿಡಿಯೋ 2023 ರದ್ದು

Fact Check: హైదరాబాద్‌లో ఇంట్లోకి చొరబడి పూజారిపై దాడి? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి