ரத்தன் டாடாவின் கருத்து என்று வைரலாகும் தகவல் 
Tamil

Fact Check: ஆதார் கார்ட் மூலமாக மது விற்க வேண்டும் என்று கூறினாரா ரத்தன் டாடா?

Ahamed Ali

“மதுவிற்பனையை ஆதார் கார்ட் மூலமாக விற்பனை செய்ய வேண்டும். மது வாங்குபவர்களுக்கு, அரசு தரும் உணவுக்கான மானியங்கள் நிறுத்தப்படவேண்டும். மது வாங்க வசதி உள்ளவர்களால் கண்டிப்பாக உணவும் வாங்க முடியும். நாம் அவர்களுக்கு இலவசமாக உணவைக் கொடுத்தால் அவர்கள் பணத்தைக் கொடுத்து மது வாங்குகிறார்கள்.” என்று டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் தொழிலதிபருமான ரத்தன் டாடா கூறியதாக சமூக வலைதளங்களில் அவருடைய புகைப்படத்துடன் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

வைரலாகும் புகைப்படம் மற்றும் தகவல்

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் அவர் இவ்வாறு கூறவில்லை என்பது தெரியவந்தது. வைரலாகும் தகவலின் உண்மை தன்மையை கண்டறிய அது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, அவர் இவ்வாறு கூறியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.

மேலும், அவரது சமூக வலைதள பக்கங்களில் இவ்வாறான கருத்தை பதிவிட்டுள்ளாரா என்று தேடியபோது, அவ்வாறான எந்த ஒரு பதிவையும் அவர் பதிவிடவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து, மதுவிற்பனை தொடர்பாக வைரலாகும் பதிவிற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “இவ்வாறாக நான் கூறவில்லை. நன்றி” என்று ரத்தன் டாடா கூறிய செய்தியை 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் NDTV, Hindustan Times, Times Now உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

Conclusion:

நம் தேடலின் முடிவாக மதுவிற்பனையை ஆதார் கார்ட் மூலமாக செய்ய வேண்டும் என்று ரத்தன் டாடா கூறியதாக சமூகவலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் அவர் அவ்வாறு கூறவில்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Video of Nashik cop prohibiting bhajans near mosques during Azaan shared as recent

Fact Check: ഫ്രാന്‍സില്‍ കൊച്ചുകു‍ഞ്ഞിനെ ആക്രമിച്ച് മുസ്ലിം കുടിയേറ്റക്കാരന്‍? വീഡിയോയുടെ വാസ്തവം

Fact Check: சென்னை சாலைகள் வெள்ளநீரில் மூழ்கியதா? உண்மை என்ன?

ఫ్యాక్ట్ చెక్: హైదరాబాద్‌లోని దుర్గా విగ్రహం ధ్వంసమైన ఘటనను మతపరమైన కోణంతో ప్రచారం చేస్తున్నారు

Fact Check: ಆಹಾರದಲ್ಲಿ ಮೂತ್ರ ಬೆರೆಸಿದ ಆರೋಪದ ಮೇಲೆ ಬಂಧನವಾಗಿರುವ ಮಹಿಳೆ ಮುಸ್ಲಿಂ ಅಲ್ಲ