fifthestatedigital1
Tamil

Fact Check: தஞ்சை பெரிய கோவிலின் அகழி தவெக ஆட்சி அமைத்ததும் தூய்மை செய்யப்பட்டதா? உண்மை என்ன

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தபிறகு தஞ்சை பெரியகோவிலின் அகழி சுத்தம் செய்யப்படுவதாக வைரலாகும் தகவல்

Southcheck Network

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், நீண்ட காலமாகப் புதர்கள் மண்டி, குப்பைக்காடாகக் காட்சியளித்த தஞ்சை பெரிய கோவில் அகழி முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுவிட்டதாக ஒரு காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வைரலாகும் அந்தப் பதிவில், பெரிய கோவிலைச் சுற்றியுள்ள அகழிப் பகுதியில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, தூய்மைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Fact Check:

இணையத்தில் வைரலாகும் இந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்தோம். தஞ்சை பெரிய கோவிலின் ஆன்மீகப் பணிகள் மற்றும் பூஜைகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானமும், இந்து சமய அறநிலையத்துறையும் நிர்வகித்து வருகின்றன. அதேநேரம், கோவிலின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை இந்திய தொல்லியல் துறை (ASI) கவனித்து வருகிறது.

முன்னதாக, கோவிலின் முன்பகுதி அகழியில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து காணப்பட்டபோது, அந்தப் பராமரிப்புப் பணிகளைத் தாங்களே மேற்கொள்வதாகவும், அதற்கான தொகையைத் தங்களுக்கு வழங்குமாறும் இந்திய தொல்லியல் துறை தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்தது. அதனடிப்படையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 4.88 கோடி நிதி தொல்லியல் துறைக்கு ஒதுக்கப்பட்டது. எனினும், நிதி ஒதுக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் (அதாவது 2023 ஆம் ஆண்டு வரை), அகழி மேம்பாட்டுப் பணிகளை இந்திய தொல்லியல் துறை தொடங்கவில்லை என்பது கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான ETV Bharat Tamilnadu செய்தி அறிக்கைகளின் மூலம் உறுதியாகிறது.

இந்தச் சூழலில் தான், தஞ்சை பெரிய கோவில் மற்றும் மாநகரப் பகுதியைச் சுற்றியுள்ள அகழி நீர்வழிப்பாதைகளில் மண்டியிருந்த முள் புதர்கள், கருவேல மரங்கள் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்றி, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குத் தூய்மைப்படுத்தும் பணிகள் அண்மையில் நடைபெற்றன.

இப்பணிகள் குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தஞ்சை பெரிய கோவில் மற்றும் மாநகர அகழிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் கடந்த மே மாதம் 16 ஆம் தேதியே தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், பெரிய கோவிலின் பின்புறம் உள்ள அகழிப் பகுதி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குச் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இப்பணிகளுக்காக ரூ. 3.5 கோடி மதிப்பில் புதிதாக ஏழு அதிநவீன ஜே.சி.பி (JCB) இயந்திரங்கள் வாங்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்திருந்தார்.

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வத் தகவலின்படி, இந்த அகழித் தூய்மைப் பணிகள் அனைத்தும் மே 16 ஆம் தேதியே தொடங்கி நடைபெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய அரசு 2026 மே 10 அன்று தான் முறைப்படி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. இதிலிருந்து, ஏற்கனவே திட்டமிடப்பட்டுத் தொடங்கப்பட்ட ஒரு அரசுப் பணியைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி, தவெக அரசு தான் இதைச் செய்தது எனச் சமூக ஊடகங்களில் தவறான செய்தியைத் திரித்துப் பரப்பி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Conclusion:

நமது விரிவான தேடல் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், தவெக ஆட்சி அமைந்த பிறகுதான் தஞ்சை பெரிய கோவில் அகழிப் புதர்கள் அகற்றப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டது என்று பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்பதும், அரசியல் காரணங்களுக்காகத் தவறாகத் திரிக்கப்பட்டவை என்பதும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Fact Check: Women taking shelter during Japan earthquake caught on tape? No, here’s the truth

Fact Check: മില്‍മ വാര്‍ഷികത്തോടനുബന്ധിച്ച് ക്യാഷ് പ്രൈസ്? വാട്സാപ്പില്‍ പ്രചരിക്കുന്ന ലിങ്കിന്റെ വാസ്തവം

Fact Check: உதயநிதி ஸ்டாலின் ‘GenZ DMK’ குழுவினருக்கு மது விருந்து அளித்ததாக வைரலாகும் புகைப்படம்? உண்மை என்ன

Fact Check: ‘ಉಚಿತ ಗುಂಡಿ ಭಾಗ್ಯ' ಎಂದು ವೈರಲ್ ಆಗಿರುವ ವೀಡಿಯೊ ಕರ್ನಾಟಕದ್ದಲ್ಲ, ಇದು ಗುಜರಾತ್‌ನಲ್ಲಿ ನಡೆದ ಘಟನೆ

Fact Check: శ్రీరాముడిపై అనుచిత వ్యాఖ్యలు చేశాడని భీమ్ ఆర్మీ నేతను పోలీసులు కొట్టారా? కాదు, సంబంధం లేని పాత వీడియో వైరల్